Friday, December 3, 2010

இனி செல் போன் வாங்கி அதிகம் நேரம் பேசுங்க....


மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் பேட்டரி பேசுவதற்கு திறன் கொடுக்கும். இப்போது மல்ட்டி மீடியா இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், பேட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றனஅமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர்
    ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் ஆக்ஸைட் கொண்டு நானோ வயர் பீல்டை உருவாக்கி, அதனை  இரண்டு எலக்ட்ரோடுகளுக்கிடையே அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது  50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது. எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம்இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.

No comments:

Post a Comment